ஐ.நாவில் இலங்கைக்கு கிடுக்குப்பிடி! 18 மாதங்களுக்குள் இராணுவத்திற்கு காத்திருக்கும் நெருக்கடி (VIDEO)
ஐ.நாவில் இலங்கைக்கு மேலும் 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது இராணுவத்திற்கு கடும் நெருக்கடி காத்திருப்பதாக மனித உரிமைகள் இணைப்பாளர் பிரித்தானிய தழிழர் பேரவை சுதா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினருக்கெதிராக பிரித்தானியாவில் பயணத்தடை விதிக்கும் திட்டம் தொடர்பில் இதுவரை பிரித்தானியா வெளிப்படையாக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையெனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவத்தை ஐ.நா கவனமாக அவதானித்து வரும் நிலையில், போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மாத்திரமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் எதிராக பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,