தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்
தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார இன்று (23) காலை காலமாகியுள்ளார்.
இவர் திடீர் சுகவீனம் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல உயர் பதவிகள்
மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தனது உயர் கல்வியை பேராதனை(Peradeniya) மற்றும் மொரட்டுவை (Moratuwa)ஆகிய பல்கலைக்கழகங்களில் நிறைவு செய்து பொறியியலாளராக தனது தொழிலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர் தொடருந்து திணைக்களத்தின் தலைமைப் பொறியியலாளர் மற்றும் உட்கட்டமைப்பு பொது முகாமையாளர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |