இரத்தினக்கல் வியாபார பணமோசடியில் சிக்கிய வர்த்தகர்: பொலிஸார் நடவடிக்கை
பேருவளை பிரதேசத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 10 நீல மாணிக்கற்களை பெற்று விலை மதிப்பற்ற காசோலைகளை வழங்கியதாக கூறப்படும் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர்கள் இருவரினால் முன்வைக்கப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை அடுத்து ஜா-அல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபரான வர்த்தகர் முறைப்பாட்டாளரான பேருவளை வர்த்தகரிடம் இருந்து 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பெறுமதியான 09 நீல இரத்தினகற்களை பெற்று அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
அதேபோன்று, பேருவளை பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இரத்தினக்கல் வர்த்தகரிடம் இருந்து 13 இலட்சத்து 50,000 ரூபா பெறுமதியான நீலக்கல் ஒன்றும் பெறப்பட்டு அதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இரண்டு இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு வழங்கிய 8 காசோலைகளை அந்த வங்கியில் ஒப்படைத்ததன் பின்னர் அவை பெறுமதியற்ற காசோலைகள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் சந்தேக நபருக்கு அறிவித்தும் பணத்தை வழங்குவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், விசாரணைகளின் பின் களுத்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
