கத்தி முனையில் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் - பருத்தித்துறையில் சம்பவம்
பருத்தித்துறை புலோலிப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த திருடர்கள் கத்திமுனையில் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
சிவராத்திரி தினத்தையொட்டி வீட்டில் குடும்பஸ்தர் கோவிலுக்குச் சென்ற நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
இச் சம்பவம் இன்று மாலை 6:45 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை புலோலிப் பகுதியில் வசிக்கும், வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் வீட்டிலேயே இக் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
முகத்தை மறைத்து முகமூடி அணிந்து கத்தியோடு உள்நுழைந்த இருவரைக் கண்டதும், வீட்டில் இருந்த அதிபரின் மனைவி, மகள்கள் ஆகியோர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அதிபரின் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்து தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan