தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு கோரிக்கை!
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (23.04.2023) வெளியாகியுள்ள ஆங்கில செய்தித்தாள் ஒன்றிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்கள்
மேலும் அந்த செய்தியில், தேசபந்து தென்னகோன் தனது கடமைகளைச் செய்யத் தவறியதன் மூலம், காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது குற்றஞ்சாட்டுமாறு பொலிஸ்மா அதிபருக்குச் சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், கடந்த வருடம் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 33 சந்தேக நபர்களைப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சனத் நிஷாந்த - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
அவர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆகியோர் அடங்குகிறார்கள்.
இதேவேளை, தேசபந்து தென்னக்கோன், சிடி விக்ரமரத்னவின் ஓய்வுக்குப் பின்னர்
அடுத்த பொலிஸ்மா அதிபராகப் பதவியேற்கவிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
