காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக சிறப்பு பூசை பரிகாரம்
காலிமுகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த 30 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.