கஜேந்திரகுமாரின் மதில் கட்டுமானதிற்கு எதிராக யாழ். மாநகர சபை எடுத்துள்ள தீர்மானம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது.
யாழ். மாநகர சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - நல்லூர் குறுக்கு வீதியில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக வீடொன்றை நிர்மணித்துள்ளார்.
ப.தர்சானந்த்தின் கேள்வி
யாழ். மாநகரசபை அமர்வு நடந்த போது, இந்த மதில் விவகாரம் தொடர்பில் மாநகர சபை உறுப்பினரொருவரால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை முதல்வரின் உத்தரவு
இந்த நிலையில், அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது. அதனால் அந்த கட்டுமான பணிகளை
உடனடியாக இடைநிறுத்துவதுடன் முறையான அனுமதியை பெற்று கட்டுமானத்தை தொடரும்படி மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.