ஆவேசத்தில் போராட்டக்காரர்கள்; அரசியல்வாதிகளை விரட்டும் இளைஞர்கள் - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகக் கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்குத் தான் சென்றாலும் மக்கள் தன்னை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூட என்பதால், தான் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,