எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா? வெளியானது தகவல்
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், அரசாங்கத்திடம் மீளவும் யோசனை முன்வைத்துள்ளது.
விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்த யோசனையை அனுப்பி வைத்துள்ளதாக, கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
எவ்வாறிருப்பினும், குறித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவேண்டிய அவசியத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், தற்போது டீசல் ஒரு லீற்றருக்காக சுமார் 50 ரூபா நட்டத்தையும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக சுமார் 15 ரூபா நட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளது.
எவ்வாறிருப்பினும், முன்னதாக கருத்து தெரிவித்திருந்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, டீசல் ஒரு லீற்றருக்காக 35 ரூபாவும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக 5 ரூபாவும் நட்டம் ஏற்படுகின்றதென, கனியவள கூட்டுத்தாபனம் அறியப்படுத்தி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், கடந்த ஆறாம் திகதி நள்ளிரவு முதல், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam