எரிபொருள் விலை குறைக்கப்பட்டது! சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
இன்று நள்ளிரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒக்டேன் 95 மற்றும் சுப்பர் டீசலின் விலையை 10 ரூபாவினாலும் குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் புதிய விலைகள்..
பெட்ரோல் 92 - ரூபா 450
பெட்ரோல் 95 - ரூபா 540
டீசல் - ரூபா 440
சுப்பர் டீசல் - ரூபா 510
இதேவேளை, புதிய எரிபொருள் அட்டை முறையின்படி ஜூலை 21ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.