இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கான தகவல்! எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை
இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் ஆரம்பம்
அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையைாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
| மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும்: பிரதமர் |

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம்
அந்த வகையில், வாகன இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் 3, 4, 5, 6 ஆகிய இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன இலக்க தகட்டில் 6, 7, 8, 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
| எரிபொருளைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்க! நேற்று முதல் நடைமுறை |
எனினும் குறித்த நடைமுறை எப்போது முதல் செயற்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri