எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை அறிவிப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறைக்கு அமைய உந்துருளிகளுக்கு 1,000, ரூபாவுக்கும், முச்சக்கர வாகனங்களுக்கு 1,500 ரூபாவுக்கும் சிற்றூந்துகள்,வேன்கள் மற்றும் ஜீப்புகளுக்கு 5,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
எனினும் பேருந்துகள், பாரவூர்திகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.