போர்களமாக மாறிய எரிபொருள் நிரப்ப நிலையம்! குண்டர்களை விரட்டியடித்த பெண்கள்
கலேவெல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கலேவெல மகுலுகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (23) பிற்பகல் பல தடவைகள் போர்க்களமாக மாறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மகுலுகஸ்வெவ பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குண்டர்களை விரட்டியடித்த பெண்கள்
இவ்வாறானதொரு நிலை இன்று 23ம் திகதி பிற்பகல் எரிபொருள் விநியோகத்தின் போது குண்டர்கள் வந்து அப்பகுதி மக்களை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்காத வேளையில், பெண்கள் குழுவொன்று வந்து அந்தக் கும்பலைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
அப்போது, பெண்கள் குண்டர்களை விரட்டியடித்த போதும், பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பொலிசார், இராணுவத்தினர் என அனைவரும் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை குண்டர்கள் கைப்பற்றியதாக எரிபொருள் எடுக்க வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்தாலும் பொலிஸாரிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் ஏனைய குழுக்களும் தம்மை தாக்கியதாக நுகர்வோர்கள் ஏற்கனவே மகுலுகஸ்வெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri
