மாகாண சபைத் தேர்தலை நடத்த ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி
மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த ஆதரவை வழங்குவது என தமது கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இவர்கள் இதனை கூறியுள்ளனர்.