இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் போலி வைத்தியர்
கொழும்பில் வைத்தியர் போன்று நடித்து ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்தியர் போன்று நடித்து வெளிநாட்டுக்கு நபர்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் வெளியான தகவல்
பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், ஒருவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 70,000 ரூபாவை ஏமாற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யக்வில, பன்னல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri