மட்டக்களப்பில் புதையல் தோண்ட முயற்சித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் உட்பட நால்வர் கைது (Photos)
மட்டக்களப்பு - காரக்காடு பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 4 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் (25.04.2023) கைது செய்யப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதம பொலிஸ் பரிசோதகர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என தெரியவருகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
விசேட அதிரடிப் படையினர் வீதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது புதையல் தோண்டுவதற்காக சென்ற சந்தேநபர்களை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது உயர் ரக ஸ்கானர் இயந்திரம் ஒன்றை மீட்டதையடுத்து சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
