யாழில் விபத்தில் சிக்கிய முன்னாள் போராளி பலி
யாழில் விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த 04.10.2024 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த போராளி நடேசு பரமேஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (06.10.2024) அதிகாலை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் விபத்து குறித்து மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் மிதிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri