சினிமா பாணியில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண்!
சினிமா பாணியில் சுமார் 100 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து தற்போது வரையில் 51 உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உகண்டா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டாவில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 இலக்க விமானத்தில் இன்று காலை குறித்த பெண் இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் அவரை ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிட்ட போது இந்த கொக்கேய்ன் தொகை அவரின் வயிற்றில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் கொக்கேய்ன் போதைப்பொருள் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து கொக்கேய்ன் போதைப்பொருளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
