வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி
வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வந்த 57 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது பயண பொதியில் பெருந்தொகை போதைப்பொருளை கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளின் பெறுமதி 7 கோடி 35 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பயண பொதி
சூட்சுமான முறையில் பயண பொதியில் 02 கிலோ 450 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்துள்ளார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! தொடங்கி ஒருவருடம் கூட ஆகல.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/85726b74-688e-433f-b148-b2bf66a6dfa3/24-6686e6fbe5a00-sm.webp)
முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! தொடங்கி ஒருவருடம் கூட ஆகல.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
![Varalaxmi Sarathkumar: நிக்கோலாய் ஆபத்தானவர்? வரலட்சுமிக்கு ஏற்படும் சிக்கல் என்ன? எச்சரித்த பிரபலம்](https://cdn.ibcstack.com/article/581a8565-a47b-44f9-981c-0edbc9604ba6/24-668682720ffe3-sm.webp)