அந்நிய செலாவணி நெருக்கடி தீவிரம்! அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு மேலும் இறக்குமதி தடை
எதிர்காலத்தில் அந்நிய செலாவணி நெருக்கடி மேலும் மோசமடையும் என்றும், எனவே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துமாறும் இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மீதான தாக்கம் மோசமாகும் என்பதால் இறக்குமதி கட்டுப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.
எரிபொருள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

| கோட்டாபய பிறப்பித்த இறக்குமதி தடையை நீக்கிய ரணில்! நிதி அமைச்சராக ஜனாதிபதி கையொப்பம் |
மத்திய வங்கி விடுத்த அறிவித்தல்கள்
அதற்கமைய 2,500 க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு அனுப்பியுள்ளது.
மேலும் திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும்
பொருட்களை விற்பனை செய்த பின்னர் பணம் செலுத்துவதற்கும் தற்காலிகமாக தடை
விதிக்குமாறும் மத்திய வங்கி நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan