முல்லைத்தீவில் உதைபந்தாட்ட இறுதி போட்டியில் வெற்றிவாகை சூடிய அலைகள் விளையாட்டு கழகம்
முல்லைத்தீவு முள்ளியவளையில் 2024 ஆம் ஆண்டுக்கான சஜித்தன் நினைவுக்கிண்ண காற்பந்தாட்ட இறுதி போட்டி இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை நாவற்காட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஐங்கரன் விளையாட்டு மைதானத்தில் 2024ஆம் ஆண்டுக்கான சஜித்தன் நினைவுக்கிண்ண இறுதி காற்பந்தாட்ட போட்டி இன்றைய தினம் (23.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இறுதி போட்டி
விளையாட்டு கழக தலைவர் க.நாதன் தலைமையில் ஆரம்பமான குறித்த இறுதி போட்டியில் முள்ளியவளை வித்தியா விளையாட்டுகழகம் மற்றும் சிலாவத்தை தியோநகர் அலைகள் விளையாட்டுகழகமும் போட்டியிட்டுள்ளனர்.
இரண்டு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு இறுதியில் தியோநகர் அலை விளையாட்டு கழகம் 2 : 1 எனும் விகிதத்தில் வெற்றியீட்டியுள்ளது.
குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைாசா ரவிகரன், கலைமகள் மகாவித்தியாலய அதிபர் ஜெயகாந், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீசன் , கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எனஸ்டீன் , ஆன்மீக ஜோதி செல்வகுமார் , விளையாட்டுகழக உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
