ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள எதிர்கட்சி எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பை ஓகஸ்ட் முதல் வாரத்தில் அவர் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி தம்மை உரிய முறையில் நடத்தவில்லை என்பது சரத் பொன்சேகாவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ள நிலையில் அவர் இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சஜித் தரப்பு
பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அவர் கட்சியை விட்டு வெளியேறினால் சஜித் தரப்புக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் காரணத்தினால் என அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பொன்சேகா, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam