இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறியுள்ள கோவிட் தொற்று! - ஒவ்வொரு மணி நேரமும் ஐவர் பலி
நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் கோவிட் தொற்றுக்குள்ளான 5 பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போது பதிவாகும் தொற்றாளர்களை விட பல மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், இதுவரை 19 கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப நல சுகாதார சேவை பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு அமைய சுமார் ஆயிரம் தாதியர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தாதிய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
