திருமண வரவேற்பு நிகழ்வில் பட்டாசு வெடித்ததில் நேர்ந்த சோகம்
தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்றில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருமண வரவேற்பு விருந்துபசார நிகழ்வின் பொது பட்டாசு கொளுத்திய போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தனுஸ்க லக்மால் ஜயதிலக்க என்ற 31 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |