தேர்தலால் பட்டாசு விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டாசுகளுக்கான தேவை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏனைய ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் பட்டாசு விற்பனை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படும்.
இந்த காலக்கட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்திற்காகவே தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
பட்டாசு கொள்வனவு
எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசார கூட்டங்கள் ஆரம்பமானதும் பட்டாசுகளின் விற்பனை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையால் தேர்தல் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள் பட்டாசுகளை கொள்வனவு செய்வதற்காக கிம்புல பிட்டிய பிரதேசத்திற்கு வருகை தருவதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பட்டாசு விற்பனையாளர்களுக்கு இம்முறை மிகப்பெரிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 2 மணி நேரம் முன்

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
