அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்த போராட்டம் (PHOTOS)
எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினர் கம்பளை நகரில் தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இன்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கண்டித்து கோஷத்துடன் தீப்பந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையும் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன்,உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் தொடர்ந்தும் எரிப்பொருள் விலை உச்சத்தை தொட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.