இலங்கை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்: டிரான் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை பொலிஸாரின் தந்திரோபாய பிரிவான சிறப்பு அதிரடிப் படையினர் கடந்த மூன்று வருடங்களில் பெருமளவிளான துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம்(06.06.2023) உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்
மொத்தமாக 1,163 சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் டி 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் சுழல் துப்பாக்கிகள் ஆகியவை அடங்குகின்றன.
இதேவேளை மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆயுதங்கள் நாட்டின் தெற்குக்கு எடுத்து வரப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |