யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமான உணவகத்திற்கு தீவைப்பு (VIDEO)
யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமான உணவகத்திற்கு போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
சிங்கராஜா பகுதியில் அமைந்துள்ள யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகம்,தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பிலான காணொளியும் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தொடர்ச்சியாக தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.