அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நேற்று(06) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் கோரிக்கைகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும் அல்லது பிணையிலாவது விடுதலை
செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகத்திடம் கடிதம் மூலம்
அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்
இதேவேளை விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பூநகரி-
முக்கொம்பன் பகுதியில் கைது செய்யப்பட்ட உ.உமாகாந்தன், ர.சயந்தன், வி.இன்பராஜ்,
மகேந்திரன் பார்த்தீபன் மற்றும் வடமராட்சி தாளைடியை சேர்ந்த செ.உதயசிவம் உட்பட
12 இளைஞர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.