அரசாங்க ஊழியர்களை காப்பாற்றும் விவசாயிகள்
அரச ஊழியர்களின் இம்மாத சம்பளத்தை வழங்குவதற்காக விவசாய அமைச்சு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பை வழங்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்திலும் இதற்கான ஒத்துழைப்பை அமைச்சின் ஊடாக வழங்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.
உர விற்பனையின் மூலம் கிடைத்த வருமானத்தை இதற்காக வழங்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.
அரச ஊடகம் ஒன்றில் இன்று நடைபெற்ற இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.
அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாவிட்டால் தனியார் நிறுவனங்கள்
விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதாகவும்
அமைச்சர் சுட்டிக்காட்டினார்.