யாழில் நடந்த பயங்கரம் - பெண்ணொருவரை உயிருடன் எரித்த நபர்
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் இந்த பயங்கரம் நேர்ந்துள்ளது.
குறித்த பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் அவரை தீ மூட்டி கொழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ வைக்கப்பட்ட பெண்
சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீயை அணைத்து குறித்த பெண்ணை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் மீது தீ மூட்டப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Sri Lanka Parliament Election 2024 Live Updates





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
