தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் : வவுணதீவில் சம்பவம்
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈச்சந்தீவு நாவற்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று(09) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய குறித்த நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தனது வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தனது சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
நாளாந்தம் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர் நேற்று முன்தினம் மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து வெளியேறியவர் வீடு திரும்பவில்லை.
அவர் வயல் பிரதேசத்தில் மரமொன்றில் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிமன்ற நீதிவான் வி.விணோபா இந்திரனின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளார்.
பின் அவர் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை
வவுணதீ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
கல்யாண விஷயத்தில் நிலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam