தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலை கட்டடத்தில் தீப்பரவல்
களனியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலை கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள குறித்த கட்டடத்தில் இன்று காலை தீ பரவியுள்ளது.
இந்த நிலையில் தீயணைப்பு பணிகளுக்காக பேலியகொடை நகரசபையின் 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள போதும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த தீப்பரவல் காரணமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத போதிலும் பெருமளவு பொருட்கள் தீயில் கருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.