கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த பொலிஸாரிடம் சிக்கிய மோசடியாளர்
இலங்கையில் பேஸ்புக் கணக்கிற்கு மோசடியான முறையில் உள்நுழைந்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று நாட்டிற்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தனது உறவினர் போல் காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து, மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து 700,000 ரூபாவை, தனது கணக்கிற்கு மாற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
இது தொடர்பான முறைப்பாடு 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைத்தது.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை சோதனையிட்ட போது சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
குடிவரவுத் தடை
சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய, அவர் கட்டார் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டு, நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
எதிர்நீச்சல் சீரியலின் புதிய வில்லன் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார் தெரியுமா? ஷாக் கொடுத்த புரோமோ Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam