கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த பொலிஸாரிடம் சிக்கிய மோசடியாளர்
இலங்கையில் பேஸ்புக் கணக்கிற்கு மோசடியான முறையில் உள்நுழைந்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று நாட்டிற்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தனது உறவினர் போல் காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து, மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து 700,000 ரூபாவை, தனது கணக்கிற்கு மாற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
இது தொடர்பான முறைப்பாடு 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைத்தது.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை சோதனையிட்ட போது சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
குடிவரவுத் தடை
சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய, அவர் கட்டார் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டு, நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri