ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி! (Video)
பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்களை திருத்தி, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் கீழிருந்த மத்திய கலாநார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிய சட்டம் என்பன புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சிலிருந்து நீக்கப்பட்டிருந்த அனைத்து நிறுவனங்கள் மற்றும் விசேட பொறுப்புக்கள், நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட கொழும்பு தொலைகாட்சி செய்திகளில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.