பதில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு பதவி நீடிப்பு
கணக்காய்வாளர் திணைக்களத்தின் பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் ஜி.எச்.டி. தர்மபாலவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்புச் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று (22.05.2025) பிற்பகல் கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் முன்மொழிவு
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் ஓய்வு பெற்ற பின்னர் 44 நாட்களாக இந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது.

இந்நிலையில், புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்த பெயரை அரசியலமைப்புச் சபை அங்கீகரிக்கவில்லை.
அதன்படி, பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசியலமைப்புச் சபைக்கு முன்வைத்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
[XUPNVZL
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri