உள்ளுராட்சி மன்றங்களின் தவணை காலம் நீடிப்பு! விசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டின் உள்ளுராட்சி மன்றங்களின் தவணைக்காலம் ஓர் ஆண்டினால் நீடிக்கப்பட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றின் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றங்களின் தவணைக் காலம் நீடிக்கப்படுவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,10 அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்தியமைத்து ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை நேற்றிரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.