நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய பேரீச்சம்பழங்கள்
காலாவதியான பேரீச்சம்பழங்கள் விற்பனை செய்யத் தயாராக இருந்த நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபை புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் மேற்கொண்ட சோதனையின் போது, மாற்றப்பட்ட உற்பத்தி திகதியுடன் 220 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலாவதியான பேரீச்சம்பழங்கள்
இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி, நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்போது புறக்கோட்டையில் உள்ள கடைகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது, அந்த சோதனைகள் நேற்றும் நடத்தப்பட்டன.
இதன்போதே மாற்றப்பட்ட உற்பத்தி திகதியுடன் 220 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அரிசியின் விலை நெல் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகரித்து வருவதால், அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே சுட்டிக்காட்டியுள்ளார்.