யாழில் மாயமான 70 பேர் - சமூகத்திற்கு ஏற்படவுள்ள பாரிய ஆபத்து! செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில், அவர்களுடன் பணியாற்றிய மேலும் 70 பேரும் மாயமாகியுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு தலைமறைவாகியுள்ளவர்களை சுகாதார துறையினர் தேடி வரும் நிலையில் அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றை தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,