முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவுக: ரவிகரன் வலியுறுத்து
முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (17.06.2025) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சமத்துவ வளப்பகிர்வு
“பாதுகாப்பாக வாழுதல் நாட்டில் வாழும் அனைவர்க்குமான உரிமை. நாட்டில் உள்ள 25 மாவட்டத்தினர்க்கும் சமத்துவ அடிப்படையில் கிடைக்கப்பட வேண்டிய வசதி. சமத்துவ அடிப்படையிலான வள பரவலாக்கத்தை கொள்கை அளவில் வலியுறுத்தும் இந்த அரசு நான் சார்பாகும் வன்னி மாவட்டத்திற்கு சமத்துவ வளப்பகிர்வை மேற்கொள்வீர்களா என்பது எனது கேள்வி.
வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவிலும் மன்னாரிலும் இதுவரை ஒரு தீயணைப்பு சேவை நிலையம் கூட இல்லாதது எமக்கு கவலையளிக்கிறது. நெடுங்காலமாக போரின் வடுக்களைச் சுமந்துவாழும் மக்களை முற்றுமுழுதாகக் கொண்ட மாவட்டம் முல்லைத்தீவு.
மக்களையும் காலாகாலமாகச் சேர்த்த சொத்துகளையும் இழந்து இப்போது மெல்ல மெல்ல மண்ணையும் கூட இழந்துவருகிறோம். இந்த அரசின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை நாம் வரவேற்கிறோம்.
அத்தோடு இன்னமும் தீராதுள்ள எங்களின் அத்தியாவசிய தேவைகளை விரைவாக நிறைவேற்றித் தரவேண்டியதும் உங்களின் கடன் என்பதை இந்தப் பேரவையில் நினைவுபடுத்துகிறேன்.
எம் மக்களின் இயல்பிருப்புக்கும் நிலையான வளர்ச்சிக்கும் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான தீயணைப்பு சேவையை விரைவாக முல்லைத்தீவிலும் மன்னாரிலும் நிறுவுங்கள்.
வரட்சி, தீ விபத்து
கடைத்தொகுதிகளும் வீடுகளும் பற்றி எரியும் போது வாளிகளில் நீர் அள்ளி ஊற்றும் எங்கள் அவல வாழ்வில் நீங்கள் பேசும் சமத்துவம் எங்குள்ளது?
போரில் அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு சொந்த ஊர் மீண்டு சிறுகச்சிறுக சேர்த்த சொத்துகள் எல்லாம் தீயில் எரியும் போது கிளிநொச்சியில் இருந்தோ வவுனியாவில் இருந்தோ தீயணை ஊர்திகள் வந்து சேரும் வரை எரிகிற நெருப்பு காத்திருக்குமா?
2024ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவின் படி அண்ணளவாக 1,22,542 மக்கள் முல்லைத்தீவில் வாழ்கின்றனர். இவர்களும் இந்த நாட்டின் மக்கள் தாம். இந்த நாட்டில் மற்ற குடிமக்களைப் போல எம் மக்களுக்கும் அதே அளவிலான பாதுகாப்பு தேவை.
முல்லைத்தீவு 2617 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது . விவசாயம் மற்றும் மீன்பிடியை முதன்மையான வாழ்வாதார மூலங்களாக கொண்டு வாழும் மக்களைக் கொண்டது. ஒரு தீ விபத்து, பல ஆண்டுகால கடின உழைப்பை அழித்து குடும்பங்களை மீண்டும் வறுமையில் தள்ளும் கடும் வரட்சியை எதிர்நோக்கும் மாவட்டங்களுள் முல்லைத்தீவு ஒன்று.
வரட்சி, தீ விபத்துகளின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். காட்டுத்தீ விரைவாகவும் கட்டுப்பாடில்லாமலும் பரவி இயற்கைக் காடுகளையும் விவசாய நிலங்களையும் வீட்டு மரங்களையும் அச்சுறுத்துகிறது.
கடும்வரட்சியால் பனை மரங்கள் தீப்பற்றி எரிகின்றன. காடுகள் தீப்பற்றி பல ஏக்கர்கள் எரிந்து அழிந்து போகின்றன. 160,000 கெக்டேயர் இயற்கைக் காடுகளைக் கொண்ட முல்லைத்தீவில் 2024 இன் படியான புள்ளிவிபரத்துக்கு அமைவாக 647 கெக்டேயர் இயற்கைக் காடுகள் அழிந்துள்ளன. இவற்றை விட, மின்னொழுக்குகளால் கடைகள் தீப்பற்றி எரிகின்றன.
நாயாறு, கொக்கிளாய் பகுதிகளில் வாடிகள் கூட தீப்பற்றி முற்றாக எரிந்து அழிந்துள்ளன. பகல் நேரங்களில் ஏற்படும் தீப்பற்றல்களை விட இரவு நேரம் ஏற்படும் தீப்பற்றல்களால் அழிவுகள் அதிகம். இது ஒரு புதிய பிரச்சினை அல்ல.
முல்லைத்தீவில் தீயணைப்பு சேவையை ஏற்படுத்துங்கள் என்ற கோரல் இந்த சபைக்குள்ளும் வெளியேயும் பலமுறை எழுப்பப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
