அத்தியாவசியப் பொருட்கள் குறித்து சதொசவின் மற்றுமொரு அறிவிப்பு
லங்கா சதொசவில் ஒரு நபருக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரிசி, சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அளவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை நேற்று முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்தது.
விநியோகத்தில் பிரச்சினை இல்லை
இந்தநிலையில், ஒருவருக்கு வழங்கும் அரிசி மற்றும் சீனியின் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் ஒருவருக்கு வழங்கப்படும் 3 கிலோ அரிசியின் அளவு 5 கிலோவாகவும், சிவப்பு சீனி 2 கிலோவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் லங்கா சதொசவில் போதுமான பொருட்கள் இருப்பதாகவும் விநியோகத்தில் பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri
