உலக நாடுகளுக்கு காத்திருக்கும் மற்றுமொரு அச்சுறுத்தல்! ஆபத்தின் விளிம்பில் ஒன்றரை கோடி மக்கள்
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஒரு கோடியே 50 இலட்சம் மக்கள் ஆபத்தின் விளம்பில் சிக்கியுள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதனால் பனிப்பாறை ஏரிகளில் வெடிப்பு ஏற்படும் பட்சத்தில் பாரிய சேதம் ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகளவிலான நீர், பனிப்பாறை விட்டுச்சென்ற அழுத்தத்தை நிரப்புவதால், பனிப்பாறை ஏரி உருவாகி தொடர்ந்து பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அருகில் வசிக்கும் ஒரு கோடியே 50 இலட்சம் மக்கள் பெரும் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது