ஊழியர் சேமலாப நிதிய சலுகைகள் குறைக்கப்படும் அபாயம்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளின் பிரகாரம் அரசாங்கம் கொண்டுவரும் புதிய பிரேரணையால் ஊழியர் சேமலாபா நிதியத்தின் சலுகைகள் வாய்ப்புக்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்றையதினம் (24.06.2023) தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளின் பிரகாரம் அரசாங்கம் கொண்டு வந்துள்ள உள்ளூர் கடன் மறுசீரமைப்பு பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை.
பொருளாதார சவால்
எங்கள் கட்சியின் எதிர்ப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானித்துள்ளார்.
இந்த பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதுடன் எதிர்கட்சிகள் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதியால் சமர்பிக்கப்படவுள்ள குறித்த பிரேரணையால் நாட்டு மக்கள் பெரும் பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், EPF, ETF போன்ற ஊழியர் உரிமைகளும் குறைக்கப்படலாம்.என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
