இலங்கைக்கு சர்வதேச விசாரணையை உறுதி செய்யவும்! - அன்புமணி இராமதாஸ் அவசர வேண்டுகோள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை உறுதி செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய சுகாதார அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மதிப்பிற்குரிய ஜனாதிபதி,இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வாழும் 100 மில்லியன் தமிழ் மக்கள் சார்பில் பேசும் நான் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய சுகாதார அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவும், ஜனநாயக சக்திகளுக்காகவும் போராடி வந்துள்ளனர்.
இலங்கையில்உள்ள இன அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை மறுத்துவிட்டது மட்டுமல்லாமல்,தேசத்தின் சுதந்திரத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான இனரீதியான துஷ்பிரயோகங்கள், இன அழிப்பு மற்றும் கட்டமைப்பு, இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டது.