பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்! செய்திகளின் தொகுப்பு (VIDEO)
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை தவிர ஒரு சதம் கூட பொதுமக்கள் அதிகமாக செலுத்த வேண்டாம். அதிக விலை கேட்டால் பொலிஸாரிடமோ நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமோ முறைப்பாடு செய்யுங்கள் என்று அரலிய அரிசி உற்பத்தி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் வழமையை விட அதிகமாக அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். 10 கிலோ அரிசியை வாங்கியவர்கள் தற்போது 50 கிலோ வாங்குகிறார்கள். இவ்வாறு அதிக கேள்வி ஏற்படும் போது விநியோகம் குறைந்து விலை அதிகரிக்கக் கூடும்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது செய்திகளின் தொகுப்பு,