தென் கொரியாவில் காட்டுத் தீ! அவசரநிலை பிரகடனம்
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக 4 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் குறித்த காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிவிக்கப்படுகிறது.
குறித்த பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவசரநிலை பிரகடனம்
காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய காட்டுத் தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
