இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த அவதானம்: வெடிக்கப்போகும் போராட்டங்கள்

Colombo Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Mayuri Oct 02, 2023 06:02 AM GMT
Report

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து வீதிக்கு இறங்குவதாக தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (01.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பொருளாதார பாதிப்பு

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

மேலும் தெரிவிக்கையில், பொருளாதார பாதிப்புக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் மனசாட்சியில்லாத வகையில் திணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பினாலும் வாழ்க்கை சுமையினாலும் நடுத்தர குடும்பங்களின் சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த அவதானம்: வெடிக்கப்போகும் போராட்டங்கள் | Electricity Tariff And Charges Ceb

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் வாழ்வதா? அல்லது இறப்பதா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடியின் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல்வாதிகள் மாத்திரம் விடுமுறையை கழிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டில் இருப்பதே இல்லை. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாகவே வாழ்கிறார்கள்.

கடன் பெறுதல், மிகுதியாக உள்ள வளங்களை விற்பனை செய்தல் ஆகியனவே அரசாங்கத்தின் பிரதான பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது. தேசிய வளங்களை பாதுகாப்பதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அரசாங்கத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த அவதானம்: வெடிக்கப்போகும் போராட்டங்கள் | Electricity Tariff And Charges Ceb

சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் தவணை கடன் வழங்கலை தாமதப்படுத்தியதை தொடர்ந்து மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தற்போதைய மின் கட்டண அதிகரிப்பால் மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

3 வங்கிகள் மூலம் பிள்ளையானின் கட்சிக்கு பெருமளவு பணம்: அசாத் மௌலானா வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்

3 வங்கிகள் மூலம் பிள்ளையானின் கட்சிக்கு பெருமளவு பணம்: அசாத் மௌலானா வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்

பலர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் அதை எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள். மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவேன். அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக மின்கட்டண அதிகரிப்பு

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய சட்டவிரோதமான முறையில் மூன்றாவது தடவையாகவும் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த அவதானம்: வெடிக்கப்போகும் போராட்டங்கள் | Electricity Tariff And Charges Ceb

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், முறையற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு நான் தடையாக இருந்த காரணத்தினால் தான் என்னை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அரசாங்கம் நீக்கியது.

மின்சார கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிப ந்தனைக்கு அமைய மின்சார கட்டணத்தை மீண்டும் 22 முதல் 25 சதவீதம் வரை மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை கடந்த மாதம் 28ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு யோசனை முன்வைத்துள்ளது.

அரசாங்கம் எடுக்கவுள்ள விபரீத முடிவு: தலைகீழாக மாறப் போகும் டொலரின் பெறுமதி(Video)

அரசாங்கம் எடுக்கவுள்ள விபரீத முடிவு: தலைகீழாக மாறப் போகும் டொலரின் பெறுமதி(Video)

ஒரு வருடத்தில் இரண்டு முறை மாத்திரமே மின்கட்டணத்தை அதிகரிக்க முடியும். அதற்கமைய இந்த ஆண்டு இரண்டு தடவைகள் முறையற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த அவதானம்: வெடிக்கப்போகும் போராட்டங்கள் | Electricity Tariff And Charges Ceb

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார நெருக்கடியாலும், வாழ்க்கை சுமை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்களின் நிலை என்னவாகும் எனபதை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் எந்தளவுக்கு சுயாதீனத்துடன் செயற்படும் என்பதும் தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

சக மாணவனுக்கு இனிப்பு வழங்கிய மாணவியால் நேர்ந்த விபரீதம்

சக மாணவனுக்கு இனிப்பு வழங்கிய மாணவியால் நேர்ந்த விபரீதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US