18 சதம் நிலுவைத் தொகைக்காக மின்சாரம் துண்டிப்பு
காலி - கல்வடுகொடையில் உள்ள வீடொன்றில் மின்கட்டணத்தில் செலுத்த வேண்டிய 18 சதம் நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்தும் போது 18 சதம் பற்றாக்குறை உள்ளதாகவும், 18 சென்ட் மின்சாரம் துண்டிக்க மாட்டோம் என நிறுவனம் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மருந்துகள் உட்பட பொருட்கள் நாசம்
பின்னர் வீட்டிற்கு வந்து மின்சாரத்தை துண்டித்ததாகவும் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவிக்கையில், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மருந்துகள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர்.
பின்னர் மாலை மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
