மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது! இ.மி.சபையின் பொறியியலாளர்கள்
மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடுத்த வருட ஆரம்பத்தில் மின் விநியோகம்
அத்துடன் அடுத்த ஆண்டில் மழை வீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிலக்கரி மற்றும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
மின்வெட்டை தடுக்க கட்டணம் உயர்த்தப்படும் என அமைச்சர் கூறிய போதிலும், மின்சாரக் கட்டணம் அதிகரித்தாலும் மின்வெட்டை தவிர்க்க முடியாது என மின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
