வரிச்சலுகையுடன் மின்சார வாகன இறக்குமதி! நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள திட்டம்
வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்கு அனுப்பிய தொழிலாளர்களுக்கு வரிச் சலுகையுடன் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் நேற்று (09.03.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகையில், கடந்த வருட இறுதியில் வெளிநாட்டு பண அனுப்பல் 475 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளது.
சட்டரீதியான பணவனுப்பல்கள்
இலங்கையில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு டொலர்களை சட்டரீதியாக இலங்கைக்கு அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளரொருவர், இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தில் பாதிக்கு சமமான CFI மதிப்புடைய மின்சார வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலுத்த வேண்டிய வரியை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 36 நிமிடங்கள் முன்

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
